முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் உதய கம்மன்பில மூன்று மணிநேர வாக்குமூலம் அளித்த பின்னர்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.
சுங்கத்திலிருந்து முறையான ஆய்வுகள்
இல்லாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம்
அளிப்பதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்
முன்னிலையாகியிருந்தார்.