கதிர்காமம்
நோக்கிய பாதயாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு குடிநீர் வழங்கவென,
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் சமூக செயற்பாட்டாளர் லயன் க.
தட்சணமூர்த்தி , அம்பாறை மாவட்ட சிவதொண்டன் அமைப்பிற்கு ரூ. 7.5 இலட்சம்
பெறுமதியுள்ள புதிய தண்ணீர் பவுசரை நன்கொடையாக வழங்கி வைத்தார்.
இந்
நிகழ்வு காரைதீவு கந்தசாமி ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சபா
கோவர்த்தன சர்மா முன்னிலையில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பவுசர், குமண மற்றும் யால காடுகள் வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க பயன்படுத்தப்படும்.
28
ஆண்டுகால பாதயாத்திரை அனுபவம் கொண்ட தட்சணமூர்த்தி, யாத்ரீகர்கள்
சந்திக்கும் துன்பங்களை ஆழமாக உணர்ந்து, இந்த அர்ப்பணிப்பு சேவையை
மேற்கொண்டுள்ளார்.
இந்
நிகழ்வில், அவரது குடும்பத்தினர், சிவதொண்டன் அமைப்பினர், கோயில்
நிர்வாகிகள், கிராமத் தலைவர்கள், கலாசார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
(வி.ரி. சகாதேவராஜா)