சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூறியது ஆதாரமற்றது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் மார்ஷல்
சம்பத் துய்யகொண்டா தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை தவறாக வழிநடத்துவது ஒரு குற்றம் என்றும் துறைமுகத்திற்கு வரும் அனைத்து கொள்கலன்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.