கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் பாதையில்
விபத்து ஏற்படவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படவிருந்த நிலையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் பாரிய தாழிறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. காலை 5.30 மணியளவில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் இதனை அவதானித்து உடனடியாக தொடருந்து நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
ரயில் நிலைய அதிகாரிகள்
உடனடியாக செயற்பட்ட ரயில் நிலைய அதிகாரிகள் அந்த நேரத்தில் குறித்த தண்டவாளத்தின் ஊடாக வந்த ரயிலை நிறுத்தி பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.
இதன் காரணமாக கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான
ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை நபர் ஒருவர் தெரியப்படுத்தும் வகையில்
சிவப்பு சட்டையுடன் ஓடியிருந்தார்.
இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டதுடன், தொடருந்த நிலைய அதிகாரிகளால் அவர் பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.