மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவர், அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி அவர்களின் தலைமையில் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு முன்னோடியாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (ஜூன் 4) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய படியாகும்!