
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார் .
புதிய மேயராக தெரிவு செய்யப்பட்ட சிவம் பாக்கியநாதன் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது , பிரதி மேயராக தினேஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
சிவம் பாக்கியநாதன் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
"ஒரு ஆச்சரியமான திருப்பமாக, NPP அரசாங்கம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) உடன் கூட்டணி அமைக்கும் அளவிற்குச் சென்றது," என்று அவர் கூறினார்.