களைகட்டிய அம்பாளின் இறுதி நாள் பச்சை கட்டல் சடங்கு

 




 


















வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் கோயிலின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு விழாவின் பச்சை கட்டல் விழா களைகட்டி வந்தது.

இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இறுதி பச்சை கட்டல் சடங்குடன் பகல் வேளை பூஜையுடன் மிகச் சிறப்பாக நிறைவுற்றது.

இன்று இறுதிநாள்  பச்சை கட்டல் சடங்கிற்காக பல அடியார்கள் தாமாகவே முன்வந்து பச்சை காய்கறிகளை தயார் செய்தார்கள்.
அவற்றையெல்லாம் ஒரே பாத்திரத்தில் இட்டு சமைப்பது பச்சை கட்டலின் சிறப்பம்சமாகும்.

பகல் பூஜை நிறைவுற்றதும் ஆலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு பகல் பிரசாதமாக இந்த பச்சை கட்டல் சாதம் தாராளமாக வழங்கப்படுவது வழமையாகும்.

இதேவேளை பகல் இரவு பூஜைகளில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

நாளை திங்கட்கிழமை (9) மடிப்பிச்சை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆலயத்தில் நெல்குற்றி பொங்கலிடுவது வழமையாகும்.

நாளை மறுநாள் (20) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திருக்குளிர்த்தி பாடல் இடம்பெறும்.
 
 
 (வி.ரி.சகாதேவராஜா)