நவீன கால ஈரான் தான் உலகின் மிகப் பழமையான நாடு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

 


 

உலகம் எப்படி உருவானது என்பது இவ்வளவு அறிவியல் வளர்ச்சியடைந்த பின்னரும் மர்மமாகவே இருக்கிறது. இந்த உலகம் தோன்றியது பொழுது உருவான நாடு பற்றிய விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

பெரும்பாலோனார் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு கூட ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குடிபெயர்ந்த நாடாகவே இருக்கும். உலகின் மிகவும் பழமையான நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

இந்த உலகில் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. சுமாராக 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது.

இருப்பினும், உலக மக்கள் தொகை மதிப்பாய்வின்படி, இந்தியா உலகின் மிகப் பழமையான நாடு அல்ல. மனிதர்கள் 100,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததாக குறிப்பிடப்படும் நாடு நவீன இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.

அந்த வகையில் உலகில் மிக பழமையான நாடு எது என்பது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.       

உலகம் முழுவதும் தற்போதைய மக்கள் தொகை போக்குகளை கணிக்க வரலாற்று மக்கள் தொகை தரவுகளை பகுப்பாய்வு செய்யும் World Population Review கணக்கெடுப்பின்படி, பெர்சியா அல்லது நவீன கால ஈரான் தான் உலகின் மிகப் பழமையான நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

ஈரானில் மனித மக்கள் தொகை 100,000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. World Population Review பட்டியலின்படி, ஈரானின் பண்டைய வரலாறு மத்திய வெண்கல யுகத்தில் தோன்றியுள்ளது. அதன் பின்னர் ஒரு பண்டைய நாகரிகமான எலாமைட் பேரரசுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கி.மு 3200-539 வரையிலான எலாமைட் பேரரசு, உலகின் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்றாக இருக்கிறது. இது நவீன ஈரானில் மேற்கு மற்றும் தென்மேற்கு மையமாக அமைந்துள்ளது.

 தற்போதைய குஜெஸ்தான் மற்றும் இலம் மாகாணத்தின் தாழ்நிலங்கள் மற்றும் நவீன தெற்கு ஈராக்கின் ஒரு சிறிய பகுதி வரை நீண்டுள்ளது.

வலிமைமிக்க அச்செமனிட் பேரரசிலிருந்து சசானிட் சகாப்தம் மற்றும் அதன் பின்னர் இஸ்லாமிய ஆதிக்கம் வரை ஈரான் நாட்டின் ஆட்சி முறை, கலாச்சாரம் நாட்கள் செல்ல செல்ல ஏகப்பட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எகிப்து உலகின் மிகப் பழமையான நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் வரலாறு கிமு 3100 ஆம் ஆண்டு முதல் மேல் மற்றும் கீழ் எகிப்து இணைந்தது வரை உள்ளது.

 கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வருகையால் கலாச்சாரங்கள் வெளிப்படுத்துவதற்கு முன்னர் பாரோக்கள் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்துள்ளனர்.