தற்போதைய குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் இது சம்பந்தமாக, பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
நிறுவனங்கள் ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊடகங்களும் ஊட்டச்சத்து தொடர்பான சரியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஊட்டச்சத்து
என்பது சுகாதாரத் துறையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயம் அல்ல மாறாக பல
அமைச்சகங்களின் தலையீட்டின் மூலம் வெற்றிகரமாக அடைய வேண்டிய ஒரு விடயம்
என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.