காரைதீவு
பிரதேச சபை ஆட்சி அமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் உயர்மட்ட இணக்கப்பாடு
எட்டப்பட்டிருக்கின்றது. அதன் படி அவர்கள் பெயர் சுட்டுகின்ற உறுப்பினரை
தவிசாளராக்க நாம் வாக்களிக்க தயாராக இருக்கின்றோம்.
காரைதீவு
பிரதேச சபை ஆட்சி அமைப்பு தொடர்பாக மு.கா. உறுப்பினர்களாக தெரிவு
செய்யப்பட்ட எம் எச்எம் இஸ்மாயில் எம் என் எம் றனீஸ் ஆகியோடம் கேட்டபோது
அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள் .
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கை
தமிழர் கட்சி எமது கட்சியுடன் செய்து கொண்ட உயர் மட்ட இணக்கபாடு காரணமாக
காரைதீவு பிரதேச சபையை நாங்கள் அமைக்க இருக்கின்றோம் .
இலங்கை
தமிழரசு கட்சி சுட்டுகின்ற உறுப்பினருக்கு தவிசாளராக வருவதற்கு நாங்கள்
வாக்களிக்க தயாராக இருக்கின்றோம். அதேபோல் எமது கட்சி சுட்டுகின்ற
உறுப்பினருக்கு உதவி தவிசாளர் பதவி வழங்கப்படும் என்று
எதிர்பார்க்கின்றோம்.
கடந்த சபையில் இரகசியவாக்கெடுப்பு மூலம் எமக்கான உதவி தவிசாளர் பதவி பறிபோனது பற்றி அனைவரும் அறிவோம்.
எனவே,
இம்முறை அப்படி நடக்காத வகையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைப்பாளர்
முன்னிலையில் இந்த ஆறு உறுப்பினர்களும் சேர்ந்து வலுவான கட்டமைப்பிற்குள்
வருவார்கள் என்றும் இனமதபேதமின்றி பாரபட்சமின்றி இணைந்து சபையை
செயற்படுத்துவார்கள் எனவுஙஎதிர்பார்க்கின்றோம்.
( வி.ரி.சகாதேவராஜா)