மட்டக்களப்பில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் அறிவினை பகிர்ந்து கொள்வதற்கான செயலமர்வு!!



 





























சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன், இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்காக, மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாளர்களுக்கான முழு நாள் செயலமர்வு  (12) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் தனியார் விடுதியில் இடம் பெற்ற செயலமர்வு வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த பண்டார அவர்களது வழிகாட்டலில்,  வெகுஜன ஊடக அமைச்சின் (அபிவிருத்தி) பணிப்பாளர் டபிள்யு.பீ.செவ்வந்தி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஊடக அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கே.பீ.ஜயந்த, திட்ட முகாமைத்துவ நிபுணர் திருமதி. ரீனா ஜெயரெட்ணம்,  உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் தொடர்பாடல் மற்றும் வெளிக்கள செயற்பாட்டு  நிபுணர் திருமதி.யூடி தீபன் பெறேரா, வெகுசன ஊடக அமைச்சின் உத்தியோகத்தர் சந்தன, மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இச்செயலமர்வில் உணவு பாதுகாப்பு என்றால் என்ன? உணவு பாதுகாப்பு தொடர்பான சட்ட திட்டங்கள், உணவு பாதுகாப்பு தொடர்பாக எவ்வாறு ஊடக அறிக்கையிடுவது போன்ற மேலும் பல விடையங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சின் உணவு மருந்து பரிசோதகர் சு.சுதர்ஷன், இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.ஸ்ரீ பிறிந்திரன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பான முறையில் வளவாண்மை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வரதன்& செய்தி ஆசிரியர்