கொவிட் தொற்றினால் இந்தியாவில் எழுவர் மரணித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 


கொவிட் தொற்றினால் இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் எழுவர் மரணித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
மஹாராஸ்டிராவில் மாத்திரம் நேற்று 3 பேர் மரணித்தனர். 
 
டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் கொவிட் மரணங்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
டெல்லியில் பதிவான கொவிட் மரணங்களில், 5 மாத குழந்தையொன்றின் மரணமும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இந்தியாவில் 51 கொவிட் மரணங்கள் பதிவாகி இருப்பதுடன், அவற்றில் தமிழகத்தில் 4 மரணங்கள் பதிவாகியுள்ளன. 
 
அதேநேரம் அண்மைய நாட்களில் இந்தியாவில் மொத்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்திருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.