இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஜெருசலேம், டெல் அவிவ் மீது ஏவுகணைகள் மூலம் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு முதல் இஸ்ரேல் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இரண்டு பெரிய நகரங்களான ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.