காவல்துறை அதிகாரி ஒருவரின் உடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 

நீர்கொழும்பு - கொச்சிக்கடை ,கம்மல்தொட்டுபொல கடற்கரையில், இன்று காலை முச்சக்கர வண்டிக்குள் இருந்து,
காவல்துறை அதிகாரி ஒருவரின் உடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 
 
உயிரிழந்தவர் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 56 வயதுடைய காவல்துறை வாகன ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
 
இன்று அதிகாலை உள்ளூர்வாசிகள் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், அவர்கள் உடனடியாக கொச்சிக்கடை காவல்துறைக்குத் தகவல் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.