மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் அமைந்துள்ள பனிச்சையடி பாலர் பாடசாலையில் (Queen of peace pre School) சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சியானது அதன் பணிப்பாளர் அருட்தந்தை வின்சேஸ் லாஸ் (REV.FR.VINCES LAUS) தலைமையில் (05) இடம் பெற்றது.
உலக சுற்றாடல் தினமானது நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலிற்கு அமைவாக இடம் பெற்று வருகின்ற நிலையில் இப் பாலர் பாடசாலையிலும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்களில் ஒரு சிரமதான நிகழ்ச்சியையும் "துளிர்விட இடமளிப்போம்" என்ற கருப்பொருளின் கீழ் முன்பள்ளி சிறர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமது முன்பள்ளிகளில் உள்ள இடங்களில் மரங்களை நட்டு அவர்கள் அதனை பராமரிப்பதற்காக மரக்கன்றுகள் கையளிக்கப்பட்டு அவை அவர்களால் நடப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.ஜே முரளிதரன் கலந்து சிறப்பித்ததுடன், அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்ட னர்.