வீடமைப்புமற்றும் நிர்மாணத் துறை அமைச்சினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு .

 










 மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல்  நடும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் இன்று இடம் பெற்றது

முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளில் இன்று இருதய   புரம் கிழக்கிலும் திமிலதீவிலும் 2 பயனாளிகளுக்கான  வீடுகளுக்குரிய அடிக்கல்  நடும் நிகழ்வு இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீட்டுக்கான அடி கல்லினை நாட்டி வைத்தார்

 சிறப்பு அதிதியாக தேசிய விட அமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட  முகாமையாளர் டி. சுபாஸ்கரன் கலந்து கொண்டார்,  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு வீட்டிற்கு பத்து லட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் மானியத்  தொகையாக வழங்கப்பட உள்ளது.


 இன்றைய நிகழ்வுக்கு தேசிய பீட அமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள் பயனாளிகள்  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 வரதன்