மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தில் கண்ணகித்தாய்க்கு பெரு விழா .

 







கற்புக்கரசி கண்ணகிக்கு இன்று (06) விழா முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் கலாசார உத்தியோகத்தர் ஏற்பாட்டில் கண்ணகி விழா முதலைக்குடா குறிஞ்சிநகர் கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலயம் வரை அடியவர்களின் வீதி ஊர்வலத்துடன் இடம்பெற்றது.

 மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய காவியங்கள், மரபு ரீதியான வசந்தன்,  கும்மி, பாடலுக்கான அபிநயம், கொம்பு பாடல் என்பனவற்றுடன் இலங்கையில் கண்ணகி அம்மன் வழிபாட்டு வரலாறு என்பது பற்றிய கருத்துரைகளுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் N.சண்முகலிங்கம், பேராசிரியர் ஓ.முத்தையா (இந்தியா), பிரதேச செயலக உதவி பிரதேச செயலளர், கணக்காளர், ஆலய பரிபாலன சபை நிருவாகிகள், கலைஞர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.