யாழ்ப்பாணம் - கற்கோவளம் இராணுவ முகாம் அருகே மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு:

 




யாழ்ப்பாணம், ஜூன் 12: கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள ஒரு காணிக்குள் இருந்து மனித மண்டையோட்டுடன் கூடிய எலும்புச் சிதிலங்கள்  (ஜூன் 12) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை, எப்படி அங்கே வந்தன என்பது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகாத நிலையில், இந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னரே இந்தச் சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.