விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கி பயிற்சியளித்த இஸ்ரேலுக்கு, அரசாங்கம் ஏன் ஆதரவு வழங்கி வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்கொழும்பு மாவட்ட பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான் கேள்வியை எழுப்பினார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்
இஸ்ரேலின் மொசாட் என்னும் புலனாய்வுப் பிரிவு விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி வழங்கியதுடன் ஆயுதங்களை வழங்கியது. இவ்வாறு நாடுகளை பிளவடையச் செய்யும், நாடுகளுக்குள் குழப்பம் விளைவிக்கக்கூடிய இஸ்ரேல் விவகாரத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்றார்.