"
பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic
pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை
முன்னிட்டு மே 30 - ஜூன் 5 வரை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை
மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
"கடற்கரையோர
சுத்தப்படுத்துகை தினம் " எனும் தொனிப் பெரிய கல்லாறு தொடக்கம்
குருக்கள்மடம் வரையான 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையோர
சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (2025.06.04) காலை 07.30 மணி முதல்
இடம்பெற்றது.
பிரதேச செயலக
வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் - திட்டமிடல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் பங்குபற்றுதலுடன் கடற்கரை கரையோர மற்றும்
சவுக்கு மர பிரதேசங்கள் இதன்போது சுத்தம் செய்யப்பட்டன.
( வி.ரி.சகாதேவராஜா)