பாடசாலைகளுக்கு பிளாஸ்டிக்கில் உணவு வழங்குவது முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது.உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க வேண்டும், சுகாதார சேவை திணைக்களம் கண்டிப்பான உத்தரவு .


 





புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இம்முறை கல்விக்காக அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அவை மாணவர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல்  இன்று  பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றது

 மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரன் தலைமையில்  பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் இடம்பெற்றது

மட்டக்களப்பு கல்வி  வளையத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது தொடர்ந்து  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ. உதயகுமாரின் ஏற்பாட்டில் இந்த விசேட கலந்து ரையாடல் இடம் பெற்றது

இதன் போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடை செய்யப் பட்டுள்ளதுடன்   பாடசாலைகளுக்கு அண்டிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றும்

உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க முன் அதனை பாடசாலை உணவுக் குழு கண்காணிக்க வேண்டும் எனவும் இதனை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும்

 ஒருவர் ஒரு பாடசாலைக்கு மாத்திரமே உணவு வழங்குதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதுடன் 200 மாணவர்களுக்கு மாத்திரமே அவை வழங்க வேண்டும் எனவும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக் கப்பட்டது

 மட்டு வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவிக்குமார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மட்டு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு வழங்குநர்கள் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
 

வரதன்