இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரையில் 77 பேர் உயிரிழந்துள்ளதாகதெரிவிக்கப்படுகிறது .

 


இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரையில் 77 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
இன்று  தரவுகளுக்கு அமைய, மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை 7,154 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அந்த நாட்டு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
 
இதனிடையே, 8,000க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது. 
 
எனினும், இன்று காலை தரவுகளுக்கு அமைய 2,223 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.