ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 5 ஆம் திகதியானது உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 


சூழல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலகவாழ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 1972 ஆம் ஆண்டு ஸ்வீடன், ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்ற மானிட சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 5 ஆம் திகதியானது உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் தொனிப்பொருள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருதல்” (Ending Plastic Pollution) என்பதாகும்.

உலகளாவிய ரீதியில் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசுபாட்டிற்கு இறுதித் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் இம்முறை சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றாடலைப் பாதுகாக்கும் நோக்கில், பாடசாலைகள் முதல் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை சுற்றாடல் தினத்தையொட்டியதாக உலகளாவிய ரீதியில் மரநடுகை தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது.