மட்டக்களப்பு -தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகா சபை கூட்டம் - 2025





மட்டக்களப்பு, தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விசேட தேசமகா சபை கூட்டமானது எதிர்வரும் 15/06/2025 ஆந் திகதி நடைபெறும் என செயலாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இக் கூட்டமானது எதிர்வரும் 22/06/2025 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை அழைப்பிதழில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சி நிரலுக்கமைய கூட்டம் நடைபெறும் என நிருவாகம் அறிவித்துள்ளது.

எனவே சைவ மெய்யடியார்கள் அனைவரும் வருகை தந்து தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு இறையன்போடு கேட்டுக்கொள்கின்றனர்.