மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண் பெண் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல் போட்டி இடம் பெற்றது.
மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாகாண மட்ட போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வகையில் முதலாம் இடத்தை திருகோணமலை கின்னியா பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய அணியினர் ஆண்கள் பிரிவையும், பெண்கள் பிரிவையும் பலத்த போட்டிக்கு மத்தியில் தன்வசப்படுத்தினர்.
ஆண்கள்,பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்ட
அணியினரும் பெற்றுக் கொண்டதோடு தெரிவு செய்யப்பட்ட அணிகள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் தேசிய மட்ட போட்டியில் பங்கு பெற்ற உள்ளனர்.
மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் பி.ஜெயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்
சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள
பனிப்பாளர் எஸ்.பிரகாஷ் கலந்து கொண்டதோடுமற்றும் ஏ. சிவகுமார் ,கே .எம். பி.பண்டார , எம்.கேரிஸ் ஆகியோர் நடுவர்களாக மத்தியஸ்தம் வகித்தனர்.
(ஆர்.நிரோசன்)