சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு-2025

 


“பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் Ending plastic pollution எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் பழ மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது பிரதேச செயலாளரினால் நிலைபேறான சுற்றாடல் மற்றும் சூழல் நேயமிக்க பிரதேசமாக உருவாக்கும் நோக்கில் “பொலித்தீன் பாவனையின் விளைவுகள் மற்றும் கழிவு முகாமைத்துவம்” தொடர்பாக அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வானது நிகழ்த்தப்பட்டது.

மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பழமரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டங்களை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் (சுற்றாடல்) இ. கோகுலவேணி ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.