


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் கருப்பொருளுக்கு அமைவாக
மாவட்ட
சுற்றாடல் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் மாவட்ட
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ் சுரேந்திரன்
தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் கலந்து கொண்டார்.
சுற்றாடல் அமைச்சினால் இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன
தேசிய
கீதம் சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டு அதன் பின்பு உலக தினத்தை முன்னிட்டு
மர நடுகை நிகழ்வு கோட்டை பூங்கா வளாகத்தில் இடம் பெற்றது
அதனைத் தொடர்ந்து சுற்றாடலில் முக்கியத்துவம் பற்றி பிரதம அதிதிகளின் உரைகள் இடம் பெற்றதுடன்
பொழுதின் பாவனையை தவிர்க்கும் பொருட்டு துணி வகைகளால் தயாரிக்கப்பட்ட பேக்குகளும் அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எஸ் தனஜெயன் கலந்து கொண்டார்
மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலரும் இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .