தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டிற்குத் தெரிவாகிய புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

 



தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டிற்குத் தெரிவாகிய புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும்  நிகழ்வு பல்கலையின்  ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இன்று(12) இடம்பெற்றது.


முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கு 2023/2024 ஆம் கல்வியாண்டுக்காக 403 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களை முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் மாணவர் சங்க தலைவர் டி.எம்.ஏ.எஸ். தஸநாயக்க  வரவேற்றதுடன் சிரேஷ்ட மாணவர்களுடன் இணைந்து தங்களது சிறந்த கற்றல் செயற்ப்பாடுகளை தொடர முடியும் என்றும் தெரிவித்தார். அத்துடன் புதிய  மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் உணவுகள் மற்றும் அன்பளிப்புகளை வழங்கி வரவேற்றனர். 


முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் தொடர்பான ஆவணங்களை மாணவர்களுடன் சம்மந்தப்பட்ட துறைத்தலைவர்களிடம்  உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன்  ஒப்படைத்தார்.


திணைக்களங்களின் தலைவர்களான பேராசிரியர் கலாநிதி எம்.பி.எம். இஸ்மாயில், பேராசிரியர் கலாநிதி ஏ.இல்முடீன், பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என். சபானா ஆகியோர் தாங்கள் சார்ந்த துறைகளில் இணைந்துள்ள மாணவர்கள் கையாளவேண்டிய நடைமுறைகள் மற்றும் குறித்த துறைகளின் ஊடாக மாணவர்கள் அடையக்கூடிய நன்மைகள் தொடர்பில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். 


நிகழ்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தர், கல்விசாரா உதிதியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.