கடந்த 20 வருடங்களாக இந்த மாவட்டத்தை பற்றி நன்கு அறிந்த அமைச்சர் அபிவிருத்தி குழு தலைவராக வந்திருப்பது எமக்கு அதிர்ஷ்டம்- ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர்

 


 

 கடந்த 20 வருடங்களாக இந்த மாவட்டத்தை பற்றி நன்கு அறிந்த அமைச்சர் அபிவிருத்தி குழு தலைவராக வந்திருப்பது எமக்கு அதிர்ஷ்டம்  மாவட்டத்தின் முக்கிய விடயங்களை அமைச்சரவையின் முக்கிய தீர்மானங்களை விரைவாக பெற்றுக் கொள்ள முடியும்-கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர்

மட்டக்களப்பு  மாவட்டத்திற்கு ஒரு விசேடதினமாகும் நீண்ட காலத்தைப் பின்பு மாவட்டத்திற்கு அமைச்சர் ஒருவர் அபிவிருத்திக் குழு தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக சில முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது  அமைச்சரவையின் அங்கீகாரம் தேவைப் படும் அதற்கு சில நேரம் தாமதமாகும் ஆனால் தற்போது அமைச்சர் மூலம் விரைவாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்

 கடந்த 20 வருடங்களாக மாவட்டத்தை பற்றி அறிந்த ஒருவர்  இன மொழி வேறுபாடு இன்றிவந்திருப்பது நமக்கு அதிர்ஷ்டம், மாவட்டத்தின் சகல பிரச்சனைகளை அறிந்த ஒருவர் வந்திருப்பது எமக்கு  சாதகமாகும் .
 எமது அரசாங்கமானது இன மத வேறுபாடு இன்றி புதிய பயணத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிப்போம் அதற்கு அரசு அதிகாரிகளின் உதவி வேண்டும்

 நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி  மீலாய்வு  கூட்டத்தில்     மாகாண ஆளுநர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

  வரதன்