49 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகள் 2025!











இவ்வாண்டு நடைபெற உள்ள தேசிய விளையாட்டு பெருவிழாவின்  மட்டக்களப்பு மாவட்ட மட்ட கராத்தே  வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்கான மட்டக்களப்பு வெபர் மைதானத்தின்  உள்ளரங்கில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு ப. ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்றது

இப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 80 மேல்பட்ட  ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டமை  சிறப்பு அம்சமாகும்,

 சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  போட்டிக்கு இலங்கை கராத்தே  விளையாட்டு  சம்மேளனத்தின் நடுவர்கள்  மத்தியஸ்தர்களாக செயற்பட்டனர்  

 மாவட்ட மட்ட  போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் எதிர்வரும் மாதத்தில் நடைபெற உள்ள மாகாண மட்ட போட்டியில் பங்கு பெற உள்ளனர்
 மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வார்கள்.