விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

 



குஜராத் மாநிலம், அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. 
 
மேகானி நகரில் உள்ள மருத்துவர்கள் குடியிருப்பு பகுதியில் இந்த விமானம் மோதி விபத்துக்குள்ளானது. 
 
குறித்த மருத்துவ குடியிருப்பில் உள்ள மருத்துவ பயிற்சி மாணவர்கள் குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
இவ்விபத்தில் 133 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.