நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.




இந்து மா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழும் இலங்காபுரியின் பூர்வ பாகமாகிய
மட்டக்களப்புக்கு வடக்கே சகல வளங்களும் திகழும் செந்நெல் விளையும் சிறப்பான
வயல் நிலங்களும் சைவ நெறி நின்று தமிழ் வளர்க்கும்
மக்கள் வாழும் சைவப்பெரும் கிராமமாம் வந்தாறுமூலையில் தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ சிவமுத்து
மாரியம்மனுக்கும் விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான மிதுன லக்கின சுப வேளையில்
வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன ஏக குண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 13 ஆம் திகதி கிரியைகள் உடன் ஆரம்பமாகி 14 ஆம் திகதி காலை 8மணி தொடக்கம் - 15ஆம் திகதி பி.ப. 2மணி வரை எண்ணெய்க்காப்பு நடைபெற்று மறுநாள் விசுவாவசு வருடம் ஆனி திங்கள் 2ம் நாள் 16 ஆம் திகதியும் அவிட்ட நட்சத்திரமும் பஞ்சமி திதியும் சித்தயோகமும் கூடிய காலை 6:30 மணி முதல் 7:23 மணி வரையுள்ள மிதுன லக்கின சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து. மகாகபிர் நிவேதனம் தேவர்கள் வழிபாட்டிற்கு திருக்கதவம் காப்பிடல் யாக உத்வாசனம் எஜமான் அபிஷேகம் கற்பாபரண அபிஷேகம் திருமுறை ஓதி திருக்கதவும் திறத்தல் தசமங்கல
தரிசனம் மகா அபிஷேகம் விசேட பூஜை பிரதம குரு ஆசியுரையும் பிரசாதம் வழங்கல் அன்னதானமும் வழங்கப்படுவதோடு அன்றைய தினப்பூஜை நிகழ்வுகள் நெறைவுபெறும்.

மறுநாள் 17 ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை மாலை 5.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை மண்டலாபிஷேகம் பூசைகள் நடம்பெறும்.

27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அபிஷேகங்களில் சிறப்பானதாகக் கொள்ளப்படும் 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மனுக்கான மகா கும்பாபிஷேக நிகழ்வானது நிறைவு பெறவுள்ளது.

கிரியா கால விபரம் 13 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு கருமாரம்பம் விநாயகர் வழிபாடு புண்ணியாக வாசனம் அணிஞ்ஞை திரவிய சுத்தி திரவிய விபாகம் முகூர்த்த பத்திரிகை படணம் பேரிதாடனம் மகா கணபதி ஹோமம் நவக்கிரகமகம் ரக்ஷஷோக்ன ஹோமம் கங்காதேவி பூஜை ஆதித்தியாக்கினி சங்கிரனம் நூதன மூர்த்திகள் தானியாதி வாசம் ஜலாதி வாசம்நயனோன்டு மீலனம் சயனாரோகணம் பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.

பிற்பகல் 4 மணி முதல் விநாயகர் வழிபாடு கிராம சாந்தி பிரவேச பலி வாஸ்த்து சாந்தி
மிருத் சங்கிரணம் அங்குரார்பணம் ஆசார்ய ரக்ஷா பந்தனம் கடஸ்தாபனம் கலா கர்ஷணமனஹோமம்
யாக பரிவார மூர்த்திகள் பூஜை
அக்னிகாரியம் கும்பயாக சாலா பிரவேசம் திபாராதனை
தூபிஸ்தாபனம் கோவாசம் தீபஸ்தாபனம் யந்திரஸ்தாபனம் பிம்பஸ்தாபனம் அஸ்டபந்தனம் இடம்பெறும்.

14 ஆம் திகதி காலை 8மணி முதல் விநாயகர் வழிபாடு யாக பூஜை காயத்திரி ஹோம்,
அஷ்டோத்திர ஹோமம் தீபாராதனை வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம் ஆசிர்வாதம்
பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.

பி.ப. 5 மணி முதல் விநாயகர் வழிபாடு வேதபாராணம் யாக பூஜை மூல மந்திர மாலா ஹோமம் தீபாராதனை வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம் பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.

 

 ந.குகதர்சன்