தமிழ்நாடு மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சூரை மீன்பிடி துறைமுக திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் இடம்பெற்ற 97 கைது நடவடிக்கைகளில் 185 படகுகளும் 1,383 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மீனவர்களை மீட்க வலியுறுத்தி இந்திய மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.