மூன்று மாதங்களில் நடந்த 30 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 


கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாதாள உலக குழுவினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளினால் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். 

சமீப காலமாக பாதாள உலக குழு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.