28 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது .

 


சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.