FREELANCER
2024.12.03 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு battimedia ஊடக அனுசரணையில் கதிரவன் பட்டிமன்ற பேரவையும் இணைந்து அவர்களின் ஒழுங்கு படுத்துதலில் மாற்று திறனாளிகளை உற்சாகப்படுத்தி , மகிழ்வூட்டும் நிகழ்வு கதிரவன் இல்லத்தில் நடை பெற்றது
கதிரவன் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர், தாழங்குடா-03 வேடர்குடியிருப்பு கிராமசேவை உத்தியோகத்தர், உதவும் கரங்கள் தலைவர், battimedia பணிப்பாளர் மற்றும் கதிரவன் உறவுகள் என பலரும் பங்குபற்றினர்.
நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகளின் மகிமைகள் பேசப்பட்டதோடு, தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொதி வழங்கிவைக்கப்பட்டது.
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)




