நவம்பர் 14ஆம் திகதி ஆட்பதிவு திணைக்களம் இயங்காது.

 


ஆட்பதிவு திணைக்களம் அதன் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான நவம்பர் 14ஆம் திகதி கிடைக்காது என அறிவித்துள்ளது.

அன்றைய தினம் தேர்தல் பணிகளுக்கு திணைக்கள ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சேவைகள் இயங்காது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.