நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற் றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்- பெஃரல்(PAFFREL) அமைப்பு

 


2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற் றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அர சியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பெஃரல் அமைப்பின் நிறைவேற்றுபணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்ப மாகியுள்ளது.

நாட்டில் போராட்டக்காலத் தின் பின்னர் இடம்பெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும். நாட்டில் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். எனவே தேர்தலில் இளைஞர்களுக்கும் மகளிருக்கு முன்னுரிமையளிக் குமாறு நாம் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளது.