பாடசாலை ஒன்றுகூடல் வேளையில் சக்தி Crown நிகழ்ச்சியில் 3ம் இடத்தினை பிடித்து சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த பிரதீபன் சிற்சபேசன் அவர்களுக்கும் மாகாண மட்டத்தில் எமது பாடசாலைக்கு கல்வி கலாச்சார விடயங்களில் பெருமை சேர்த்த எமது சிவாநந்தியர்களை கௌரவிக்கும் செயல்பாடு பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது..
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியர் கங்காதரன் ஐயா அவர்கள் கலந்துகொண்டதுடன் பழைய மாணவர் சங்க தலைவர் மற்றும் மண் முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. வ. வாசுதேவன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பிரதி ஆணையாளர் இறைவரித் திணைக்களம் திரு.த. குணராஜா, பழைய மாணவியும் தென் எருவில் பற்று பிரதேச செயலாளருமான திருமதி. சிவப்ரியா வில்வரெட்ணம் , பாடசாலை பழைய மாணவரும் பிரதி வலய கல்வி பணிப்பாளருமான திரு ஹரிஹரராஜ், பிரதி அதிபர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான பழைய மாணவியும் முன்னாள் அதிபருமான விவேகானந்தா வித்தியாலயம் திருமதி. திலகம் ஹரிதாஸ் ஆசிரியை, பழைய மாணவரும் முன்னாள் அதிபருமான (முதலைகுடா மகாவித்தியாலயம்) திரு. அகிலேஸ்வரன் ஆகியோருடன் விளையாட்டு இணைப்பு செயலாளர் , சர்வதேச இணைப்பு செயலாளர், மாணவர் சங்க செயலாளர் ஆகியோருடன் சிற்சபேசன் அவர்களின் தந்தையும் பழைய மாணவருமான கலாநிதி பிரதீபன், அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.