மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட யுவதியின் சடலம் மீட்பு .

 


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இருந்து யுவதி ஒருவர் வியாழக்கிழமை (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

யுவதியின் சடலம் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.