உலகத்தன்மம் சமூக அமைப்பின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு உறுப்பினர்களால் திட்ட செயற்பாட்டு நடவடிக்கையாக இன்று 20.08.2024ம் திகதி காலை 9.00 மணியளவில் திருப்பெருந்துறை வட பத்திரகாளி கோவில் வளாகத்தில் உலகத்தன்மம் சமூக அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவின் ஏற்பாட்டில் அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவியும் கல்வி செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி.திருமலர்ச்செல்வி மரியநாயகம், அமைப்பின் மண்முனை வடக்கு திட்ட செயற்பாட்டுக் குழு பொருளாளரும் சமூக அபிவிருத்தி அதிகாரியுமான இ.செல்லத்தம்பி சுரேஷ், அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் செயளாளரும் சமூக கலாச்சார மேம்பாடு செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி.கமல்ராஜ் சகுந்தலா, அமைப்பின் மண்முனை வடக்கு விவசாயத்துறை அதிகாரி திரு.பாக்கியம் ஜோச் எட்வேட் இவர்களின் ஒருங்கிணைத்த நடவடிக்கையாக கோவில் வளாகத்தில் பயன் தரும் மரங்களும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்வை அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ் ராஜேந்திரன் அவர்களின் மகன் அண்கணாளன் பிறந்த தினத்தை முன்னிட்டு இன் நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தார். மேலும் உலகத்தன்மம் சமூக அமைப்பின் அமைப்பாளர் யோகேஸ்வரநாதன் இதயகீதன். மற்றும் அமைப்பின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் இ.செந்தூரன் அவர்களும் அமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் திட்டமிட்டபடி செயற்பாட்டை நடத்தி முடித்தனர். இதில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்பு வழங்கி இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.