FREELANCER
மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோவிலில் ஆன்மிக வாழ்வில் உயர்வினை நல்கும் குரு பூர்ணிமா நிகழ்வு நேற்று காலை இடம் பெற்றது .
விசேட பூஜை மற்றும் அர்ச்சனை ,பஜனை நிகழ்வுகள் , கலை நிகழ்வுகள் போன்றன நடை பெற்றன .
சுவாமி சூரார்ச்சிதானந்தர் மற்றும் பொது முகாமையாளர் நீலமாதவானந்தர் ஆகியோர் சிற்றுரை வழங்கினார்கள் .
ஏராளமான மட்டக்களப்பு கல்லடி உப்போடை பிரதேச மக்களும் , ஆன்மீகப்பற்றுள்ளவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்