மரக்கறிகளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 


 

நாட்டில் அண்மைக்காலமாக சற்று குறைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு     சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 3600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நாட்டில் 18 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority) வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் சில்லறை விலை 300 ரூபாவாகும்.

ஒரு கிலோ கோவா 500 ரூபாவுக்கும் ஒரு கிலோ பாகற்காய் சில்லறை 450 ரூபாவுக்கும் ஒரு கிலோ புடலங்காய் 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.