(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் 35 ஆம் கிராமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் நேற்று சனிக்கிழமை (20) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான பக்த அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு தீமிதிப்பில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வைக் காண மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து மக்கள் வருகை தந்ததைக் காண முடிந்தது.