FREELANCER
வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 01/07/2024 அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2024.07.22. காலை தீர்த்தோற்சவதுடன் திருவிழா நிறைவு பெற உள்ள நிலையில் , இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும் , வாகனங்கள் மூலமாகவும் ஆலய தரிசனத்துக்காக பயணித்துக்கொண்டுள்ளனர் .
பக்தர்களின் நலனை முன்னிட்டு , மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம் , கதிரவன் பட்டி மன்றப்பேரவை , சமூக நிறுவனங்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் கதிரவன் உறவுகளின் அனுசரணையுடன் தாந்தாமலை முருகன் ஆலய பாத யாத்திரை பக்தர்களுக்காக தாக சாந்தி அன்னதான நிகழ்வு 2024.07.21 இன்று காலை கொக்கட்டிசோலை பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் ரஞ்சிதமூர்த்தி அவர்களும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .