மட்டு. வால்கட்டு- மணற்பிட்டி வீதி புனரமைப்பு!








(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வால்க்கட்டு - மணற்பிட்டி வரையான வீதி புனரமைப்புப் பணிகள் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கமநல சேவை திணைக்கள உதவிப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 85 மில்லியன் ரூபா செலவில் 1.69 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வீதி புனரமைப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இந்த வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கும் முகமாக வீதிக்கான கொங்கிறீட் இடும் பணியினை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

விவசாயிகள் அதிகளவாக பயன்படுத்தப்படும் இந்த வீதியானது கடந்த 40 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.