விவசாய சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விசேட குழு கூட்டம்

 



 




 






கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் விவசாய சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விசேட குழு கூட்டம்  முன்னாள்  சுற்றாடல் அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பங்கு பற்றுதலுடனும் பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான எம்.ரியாஸ், எம்.ருவைத் , கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் எம்.சஹாப்தீன்,கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் விவசாய அமைப்பினர்,அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் மர அரிஆலைகள்,நெல் ஆலைகள் என்பவற்றை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கடதாசி ஆலை காணிக்குல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்வரும் காலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடவுள்ளது.