(கல்லடி செய்தியாளர்)
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (18) மாலை கல்லடியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிரஜைகள் சபைத் தலைவர் எஸ்.கமலதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,இறுதிப் போரில் உயிர்நீத்த எம் உறவுகளை விளக்கேற்றி,அஞ்சலி செலுத்து உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி,திருப்பழுகாமம் மகாவிஷ்ணு ஆலய பிரதம வண்ணக்கர் எஸ்.விக்னேஸ்பரன்,அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் றொக்சன் சிவதர்சன்,எல்ரோய் பாஸ்டர் ரவி,பாஸ்டர் விக்டர்,மட்டக்களப்பு இணையத்தின் உதவிச் செயலாளர் யோகிதா,பிரசைகள் சபை உறுப்பினர் கோமளா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.







