இன்று அதிகாலை செங்கலடியில் பேரூந்து விபத்து சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது .

 






 இன்று ( 2024.05.06 )நள்ளிரவு ஒருமணி அளவில்  கல்முனையில் இருந்து கொழும்பு  நோக்கி பயணித்த   அரச பேரூந்து ஒன்று செங்கலடி சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மின் கம்பத்துடன் மோதி  கடை ஒன்றுக்குள் நுழைந்துள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது .கடைக்கும் பேரூந்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது  .    சாரதி படு காயமுற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பேரூந்தில் பயணித்த 05  பயணிகள்  காயமுற்ற நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
சம்பவ இடத்துக்கு விரைந்த ஏறாவூர்  பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .