இன்று ( 2024.05.06 )நள்ளிரவு ஒருமணி அளவில் கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்று செங்கலடி சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மின் கம்பத்துடன் மோதி கடை ஒன்றுக்குள் நுழைந்துள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது .கடைக்கும் பேரூந்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது . சாரதி படு காயமுற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பேரூந்தில் பயணித்த 05 பயணிகள் காயமுற்ற நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
சம்பவ இடத்துக்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .