தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 32 ஆவது ஆண்டு நிறைவு விழா-2024
















 




















 (கல்லடி செய்தியாளர்/பிரதான செய்தியாளர் )

 

மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 32 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (18) பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை அதிபர் நாகராஜா இதயராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் ஆன்மீக அதிதியாகவும்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா முரளிதரன் பிரதம விருந்தினராகவும்,கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி கௌரவ விருந்தினராகவும்,அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் பாடசாலை ஆசிரியையும்,தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் முன்னாள் மாணவியுமான திருமதி புஸ்பலோஜினி உமாகாந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள்  மற்றும் முன்னாள் மாணவர்களின் வாத்திய இசை,கவிதை,பாடல்,நடனம் ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.

இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டீனா முரளிதரன்,விபுலானந்தா அழகியற் கற்கைகள்  நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி மற்றும் ஆசிரியை திருமதி புஸ்பலோஜினி உமாகாந்தன் ஆகியோர் நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.